ஷரீயா சட்டத்தின் கீழ் க 20 பேருக்கு காத்தான்குடி பிரதேசத்தில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது
என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற வாகாப் வாதத்திற்கு எதிரான மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.
வட்டிக்கு பணம் கொடுத்தல் , சூது , விபச்சார தொழிலில் ஈடுபட்டமை , ராணுவத்தில் இணைந்தமை உள்ளிட்ட விடயங்களை செய்தமைக்காக 20 பேருக்கு ஷரியா சட்டத்தின் படி மரண தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாஹாபி அடிப்படை வாதத்தினை துடைத்தெறிய அனைவரும் ஒன்றினைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஷரீயா சட்டத்தில் 20 பேருக்கு காத்தங்குடியில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது ; மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
Reviewed by Madawala News
on
July 05, 2019
Rating: