வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 1 வரை பிற்போடப்பட்டது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபி
இன்று காலை சுமார் 10:30 மணியளவில் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இவர் மீதான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 1 வரை பிற்போடப்பட்டுள்ளது .
முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிக்சை செய்தமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 1 வரை பிற்போடப்பட்டது.
Reviewed by Madawala News
on
July 11, 2019
Rating: