கோட்டாபய ராஜபக்ஸவை விடவும், சரத் பொன்சேகாதான் ஜனாதிபதியாக வர மிகவும் பொருத்தமானவர்.



நாட்டின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிப்பதாக இருந்தால்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை விடவும், பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாதான் மிகவும் பொருத்தமானவர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.


களுத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸதான் வருவார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில உறுதியாக தெரிவித்துள்ளமை குறித்து குமார வெல்கம எம்.பி.யிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.


தற்பொழுது நாட்டில்  பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ள மிகச் சிறந்த ஒருவர்தான் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா. கம்மம்பில சொல்லும் நபர், யுத்த காலத்தில் பயந்து அமெரிக்காவுக்கு சென்றிருந்தவர்.
சரத்பொன்சேகாவுக்கு தேர்தலில் வெற்றிபெற முடியாது போனது என யாராவது கூறுவார்களாயின் அது உண்மையானது. 


ஏனெனில், இலவச கல்வியை அறிமுகம் செய்த சி.டபிள்யு. டபிள்யு. கன்னங்கரவும் அடுத்து வந்த தேர்தலில் தோல்வியடைந்தே உள்ளார். அவ்வாறுதான் மனிதர்கள் செய்நன்றியை மறந்து விடுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஸவை விடவும், சரத் பொன்சேகாதான் ஜனாதிபதியாக வர மிகவும் பொருத்தமானவர்.  கோட்டாபய ராஜபக்ஸவை விடவும்,  சரத் பொன்சேகாதான் ஜனாதிபதியாக வர மிகவும் பொருத்தமானவர். Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.