முஸ்லிம்களுக்கு சந்தை தடை விதித்தது தொடர்பில் வென்னப்புவ பிரதேச சபை தலைவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு.
வென்னப்புவ - தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு வென்னப்புவ
பிரதேச சபையினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது அறிந்ததே.
பிரதேச சபையினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது அறிந்ததே.
இது தொடர்பான கடிதமொன்ரும் வென்னப்புவ பிரதேசசபையின் தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்ட நிலையில் இவர் விடுத்துள்ள கடித உத்தரவு தொடபில் பொலிஸார் மாரவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து பிரதேச சபைத் தலைவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கான விளக்கத்தை அவர் நீதிமன்றில் அளிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு சந்தை தடை விதித்தது தொடர்பில் வென்னப்புவ பிரதேச சபை தலைவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு.
Reviewed by Madawala News
on
June 25, 2019
Rating: