நேற்று முன்தினம் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வை
மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண ஆளுநராக மஹிந்த சமரசிங்கவை நியமித்து அந்த இடைவெளிக்கு முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாவை நியமிக்க ஜனாதிபதிக்கு யொசனை முன்வைக்கப்பட்ட போது தான் ஏற்கனவே மேல் மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் தீர்மானித்து விட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்த ஹிஸ்புல்லாவின் இடைவெளியை நிரப்பிய ஷாந்த பண்டாரவை ராஜினாமா செய்ய வைத்து அந்த இடத்திற்கு ஹிஸ்புல்லாவை நியமிக்க சுதந்திர கட்சிக்குள் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மீண்டும் பாராளுமன்றிற்கு ?
Reviewed by Madawala News
on
June 06, 2019
Rating: