அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச பலத்தை பிரயோகிக்க காவல்துறை அறிவிப்பு.
அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச பலத்தை
பிரயோகிக்குமாறு சகல காவல்துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் இதனை அறிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச பலத்தை பிரயோகிக்க காவல்துறை அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
May 13, 2019
Rating: