ஹெட்டிபொல முதல் மினுவங்கொட வரை பல பிரதேசங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவு !

கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உச்ச பட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் குளியாபிடியவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து இன்று குருநாகல் மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது .

ஹெட்டிபொல வில் துவங்கி இன்று மாலை மினுவங்கொடை வரை பல இடங்களில்  முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குளியாப்பிட்டி தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இன்று இரவு நிக்கவரெட்டியவிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.மில்லேகொடவில் வீடுகள் தாக்கப்பட்டன.கலப்பிட்டியகமவில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்பானவில் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.மினுவாங்கொடையில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இன்று மாலை முதல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் தாக்கபட்ட பள்ளிகள் கடைகள் வீடுகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கில் எடுக்க முடியாதுள்ளதாக  அங்கிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் கூறுகின்றனர்.

இன்று மாலை மினுவங்கொட பள்ளிவாயல் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.



ஹெட்டிபொல முதல் மினுவங்கொட வரை பல பிரதேசங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவு ! ஹெட்டிபொல முதல் மினுவங்கொட வரை பல பிரதேசங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவு ! Reviewed by Madawala News on May 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.