மகேஸ்வரன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுடப்பட்டார். இதற்கெல்லாம் கோயிலோ இந்துக்களோ காரணமல்ல.
கோயில்களுக்குள்ளும் துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டன யுத்த காலத்தில். மகேஸ்வரன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுடப்பட்டார்.
இதற்கெல்லாம் கோயிலோ இந்துக்களோ காரணமல்ல.
பள்ளிக்குள் அதுவும் இமாமின் அறை கட்டிலுக்கடியில் வாள் இருக்கிறதா இல்லையா என்பதை பள்ளிக்கு தொழப்போபவனால் கண்டு பிடிக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மத்தியில் வாள் குழு இப்போதும் உள்ளதை தமிழ் பொது மக்களால் கட்டுப்படுத்த முடிந்ததா? சில முட்டாள்களின் செயலுக்காக பொதுமக்களை குற்றம் சாட்டுவது மஹா முட்டாள்த்தனம்.
யுத்த காலத்தில் புலிகளின் பல ஆயுதங்கள் கோயில்களில் பிடிபட்டதாக ஊடகங்களில் படித்துள்ளேன்.
மகேஸ்வரன் சுடப்பட்டது கொச்சிகடை கோயிலில். ஜோசப் எம் பி சுடப்பட்டது மட்டக்களப்பு சர்ச்சில்.
கோயிலுக்குள்ளும் சர்ச்சிக்குள்ளும் நின்ற மக்கள் ஆயுததாரிகளை பிடித்துக்கொடுக்கவில்லை. ஏன்? அவர்களும் இதற்கு உடந்தையா?
பயங்கரவாதிகள் மதஸ்தலங்களுக்கு மரியாதை செய்வதில்லை. புலி பன்சலைக்கு குண்டு வைத்தார்கள். ஆமதுருக்களை கொன்றார்கள். சில சிங்கள தீவிரவாதிகள் பள்ளிகளை உடைத்தார்கள். இப்போது ஐ எஸ் என்ற சாத்தான் சர்ச்சுக்குள் வெடித்துள்ளான்.
வடக்கு இந்துக்கள் மத்தியில் உள்ளது போல் முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு வாள் வெட்டு குழுவும் உள்ளதாக அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. பள்ளியில் கட்டிலின் கீழ் பிடிபட்டது தனிப்பட்ட யாரும் அரசியல்வாதிகளின் செயலாக இருக்கலாம். பொலிஸ் இது பற்றி ஆய்வு செய்யும் போது சில தமிழ் இனவாதிகள் இதனை திசை திருப்புகிறார்கள். பொலிசின் முடிவு வரும் வரை பொறுத்திருப்போம்.
மகேஸ்வரன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுடப்பட்டார். இதற்கெல்லாம் கோயிலோ இந்துக்களோ காரணமல்ல.
Reviewed by Madawala News
on
April 27, 2019
Rating: