இலங்கைக்கு அமரிக்கா உதவும் !



இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து இலங்கைக்கு உதவி வழங்க அமெரிக்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து அதற்கான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மீட்பு முயற்சிகளுக்கும் பரந்துபட்ட ஒத்துழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த உதவியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் வெடிபொருட்களை கண்டறிதல், சம்பவ இடங்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் தடயவியல் பகுப்பாய்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அமெரிக்க அணிகள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பணியாற்றக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையின் பேரிலும் அவர்களுடன் ஒருங்கிணைந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பங்காண்மையானது குறுகிய பால அடிப்படையிலானதும் தற்காலிகமானதும் மற்றும் அண்மைய தாக்குதல் குறித்தும் அதேபோல் குற்றவாளிகளை நீதிக்கு முன்பாக கொண்டுவருவதற்கானதுமாகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு அமரிக்கா உதவும் ! இலங்கைக்கு அமரிக்கா உதவும் ! Reviewed by Madawala News on April 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.