நாடளாவிய ரீதியில் 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 பேர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (23) காலை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியான வௌிநாட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
பலியானவர்களில் 8 பேர் இந்தியர்கள் எனவும், 6 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்தது. கைது செய்யப்பட்டவர்கள் 26 பேர்.
Reviewed by Madawala News
on
April 23, 2019
Rating: