த‌ற்காலிக‌ வ‌யிற்றுப்ப‌சிக்காக‌ ந‌ஞ்சை உண்ண‌ முய‌ல‌ வேண்டாம்.


ம‌ஹிந்த‌ கால‌த்தில் த‌ம்புள்ள‌ ப‌ள்ளியை உடைத்து வேறு இட‌த்துக்கு  மாற்ற‌ இன‌வாதிக‌ள் முய‌ற்சி செய்த‌ போதும்
அத‌ற்கு ம‌ஹிந்த‌ அர‌சு இட‌மளிக்காத‌ நிலையில்  முஸ்லிம்க‌ளின் வ‌க்குக‌ளால் வ‌ந்த‌ ர‌ணில் அர‌சு ப‌ள்ளியை முற்றாக‌ உடைத்து  இட‌ம் மாற்ற‌ காணியும் வ‌ழ‌ங்க‌  எடுக்கும் முய‌ற்சிக‌ளை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அர‌சில் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ பிர‌ச்சினை த‌ம்புள்ள‌ ப‌ள்ளி விட‌ய‌த்திலேயே ஆர‌ம்பித்த‌து. ப‌ல‌ இன‌வாதிக‌ள் ஒன்று சேர்ந்து ப‌ள்ளியை உடைக்க‌ வ‌ந்த‌ போது கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ த‌லையிட்டு இராணுவ‌த்தை அனுப்பி அத‌னை பாதுகாத்தார். சில‌ சிறிய‌ தாக்குத‌லுட‌ன் ப‌ள்ளிவாய‌ல் த‌ப்பிய‌து. ஆனாலும் இதில் ஈடுப‌ட்டோரில் ஒரு சில‌ரையாவ‌து கைது செய்யாத‌தின் கார‌ண‌மாக‌ உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே ம‌ஹிந்த‌ அர‌சுட‌ன் முர‌ண்ப‌ட்டு வெளியேறிய‌து.

இப்போது அப்ப‌ள்ளிவாய‌லை உடைத்து வேறு இட‌த்துக்கு மாற்றுவ‌தற்கு புதிய‌ காணி ஒன்றை வ‌ழ‌ங்கும்ப‌டி பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ தெரிவித்துள்ள‌மை க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ த‌க்க‌தாகும். த‌ம்புள்ள‌ பள்ளிவாய‌ல் அதே இட‌த்தில் இருக்க‌த்த‌க்க‌ நிலையில் புதிய‌ ப‌ள்ளிவாய‌ல் ஒன்றுக்கு காணி வ‌ழ‌ங்க‌ பிர‌த‌ம‌ர் முய‌ல்வ‌து போன்று முஸ்லிம்க‌ள் ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

எம்மை பொறுத்த‌வ‌ரை ப‌ள்ளியை இட‌ம்மாற்றுவ‌து மிக‌ மோச‌மான‌ உதார‌ண‌மாக‌ எதிர்கால‌த்தில் அமையும். மேலும் ப‌ல‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ள் புனித‌ப்பிர‌தேச‌ம் என்ப‌தால் அவ‌ற்றை உடைத்து விட்டு காட்டுக்குள் காணி த‌ருகிறோம் அங்கு ப‌ள்ளி க‌ட்டுங்க‌ள் என‌ சொல்ல‌ப்ப‌ட‌லாம்.

 முஸ்லிம்க‌ள் வாக்க‌ளித்து கொண்டு வ‌ந்த‌ அர‌சினாலும் த‌ம்புள்ளையில் உள்ள‌ அப்ப‌ள்ளிவாய‌ல் அதே இட‌த்தில் இருக்க‌த்த‌க்க‌ நிலையில் அத‌னை அழ‌கிய‌ முறையில் க‌ட்டுவ‌த‌ற்கு உத‌வ‌ இந்த‌ அர‌சால் ஏன் முடிய‌வில்லை? இந்த‌ அர‌சும் இன‌வாதிக‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ அர‌சு என்ப‌தே வெளிச்ச‌மாகிற‌து.

ஆக‌வே இன‌வாதிக‌ள் வேண்டுமாயின் த‌ம்புள்ள‌ ப‌ள்ளியை உடைக்க‌ட்டும். அவ்வாறு உடைத்தால் அத‌ற்கு எதிராக‌ முஸ்லிம் ச‌மூக‌ம் நீதிம‌ன்ற‌ம் போனால் எதிர்கால‌த்தில் ப‌ல‌ ப‌ள்ளிக‌ள் காப்பாற்ற‌ப்ப‌டும்.
த‌ற்காலிக‌ வ‌யிற்றுப்ப‌சிக்காக‌ ந‌ஞ்சை உண்ண‌ முய‌ல‌ வேண்டாம் என‌ முஸ்லிம் அதிகார‌ அர‌சிய‌ல்வாதிக‌ளையும் சிவில் இய‌க்க‌ங்க‌ளையும் கேட்டுக்கொள்கிறோம்.
த‌ற்காலிக‌ வ‌யிற்றுப்ப‌சிக்காக‌ ந‌ஞ்சை உண்ண‌ முய‌ல‌ வேண்டாம். த‌ற்காலிக‌ வ‌யிற்றுப்ப‌சிக்காக‌ ந‌ஞ்சை உண்ண‌ முய‌ல‌ வேண்டாம். Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.