உடுநுவர ஹந்தஸ்ஸ அல் – மனார் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின்
இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அல் மனாரின் பழைய மாணவரும், பிரபல சமூக சேவையாளரும், தொழிலதிபருமான அல்-ஹாஜ் எம்.ஆர்.எம் ராஸிக் கலந்து கொண்டதுடன், விஷேட அதிதியாக அல் மனாரின் பழைய மாணவராகிய அல்-ஹாஜ் எம்.எச்.எம். ரிபாஸ் அவர்களும் தெநுவர கல்வி வலய அதிகாரிகள், பாடசாலையின் முன்னால் அதிபர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள், பழைய மாணவ மாணவிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கட் ஆகிய குழு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு மைதான நிகழ்சிகளும் சுவட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை இதன் சிறப்பம்சமாகும்
மூன்று இல்லங்களாக போட்டியிட்டு இக்பால் முதலாம் இடத்தையும் ஜின்னா இரண்டாம் இடத்தையும் அக்பர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
- ஆசிரியர் Fazeeh Ahmed -
உடுநுவர ஹந்தஸ்ஸ அல் – மனார் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி.
Reviewed by Madawala News
on
February 09, 2019
Rating: