கல்முனை ஸாஹிராவுக்கு நிரந்தர அதிபரை அவசரமாக நியமிக்கவும்.


(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசலையில் நிரந்தர அதிபர் இல்லாமல் மிக நீண்டகாலமாக இருக்கும்
பிரச்சினையை ஸ்மாட் ஒப் ஸ்ரீ லங்கா அமைப்பு உடன் கருத்தில் கொண்டு அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் இப் பிரச்சினைக்கு தீர்வுகானும் நோக்கில்  நேற்று (08/02/2019) கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை  கல்வி அமைச்சில் சந்தித்து கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் நிரந்தர அதிபர் பிரச்சினை சம்பந்தமாக  விரிவாக பேசினார்.

இதில் நிரந்தர அதிபரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழமை வாய்ந்த ஸாஹிறா தேசிய கல்லூரியில் காணப்படும் பெளதீக வளப் பற்றாக்குறை, சிறந்த வடிகான் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழை நீர் தேங்குவதைத் தடுத்தல், தளபாடங்கள், இடப்பற்றாக்குறை, மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்தலும் அதற்காக பாடசாலை சூழலை பொருத்தமானதாக அமைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக  அமைச்சரிடம் விளக்கினார்.

அத்துடன்  இராஜாங்க அமைச்சரிடம் தனது வேண்டுகோளை  எழுத்து மூலம் கையழித்தார்.

இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட   இராஜாங்க அமைச்சர்     விஜயகலா மகேஸ்வரன்   மிக விரைவில்  நிரந்தர அதிபர் நியமனத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.அத்துடன் அங்குள்ள இதர தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக  ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மடிடம் பிரதியமைச்சர் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கல்முனை ஸாஹிராவுக்கு நிரந்தர அதிபரை அவசரமாக நியமிக்கவும். கல்முனை ஸாஹிராவுக்கு நிரந்தர அதிபரை அவசரமாக நியமிக்கவும். Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.