புல்மோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் நடத்துனர் மீது இன்று
(09) காலை 10.30 மணியளவில் சிலாபம் நகரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் கிண்ணியா பகுதியைச் பி.ரொஷான் ( வயது 24) என்ற நடத்துன தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிகின்றனர்.
நீர்கொழும்பு- சிலாபம் மார்க்கம் ஊடாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் மீது வியாழக்கிழமை (07) நீர்கொழும்பு பொலிஸாரினால் தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும், நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரியும் சிலாபம் - நீர்கொழும்பு தனியார் பஸ் நடத்துனர்கள் சங்கம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் குழு ஒன்றாலேயே குறித்த தனியார் பஸ் நடத்துனர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பஸ்ஸின் நடத்துனர் (கிண்ணியா ரொஷான்) மீது குழு ஒன்று தாக்குதல்.
Reviewed by Madawala News
on
February 09, 2019
Rating: