ஆசிரிய சகோதரிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர் மற்றும் மாணவர்கள்.


வட்டு பிளவத்தை அமெரிக்க மிசன் தமிழ் கவலவன் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியைகள்
இருவரை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்பாட்டம் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது,

தரம் 1 முதல் 5 ஆம் ஆண்டு வரை காணப்படும் குறித்த பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலையின் மாணவர்கள் ஆகியோரே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபடப்டுள்ளனர்.

சகோதரிகள் இருவர் பல வருடங்களாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர் என்வும் அவர்களின் அசமந்த போக்கினால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைவதாகவும் தெரிவித்து இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகி;ன்றது.

அத்துடன் குறித்;த ஆசிரியைகள் இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்ட போதிலும் அரசியல் வாதிகளின் உதவியினால் தொடர்ந்தும் அப்பபாடசாலையில் கற்பித்து வருகின்றனர் என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உரிய உயர் அதிகாரிகள் வருகை தந்து உரிய பதில் வழங்கும் வரை ஆர்பாட்டத்தினை கைவிடப்போவதில்லை எனவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் பங்கீடு செய்வதில் கல்வி அதிகாரிகள் கடைப்பிடிக்கும் முறையற்ற நடைமுறைகளால் சிறிய பாடசாலைகளும் கிராமப்புற மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும்  பெற்றோர்களும்,  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆசிரிய சகோதரிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர் மற்றும் மாணவர்கள். ஆசிரிய சகோதரிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர் மற்றும் மாணவர்கள். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.