இந்திய யுவதிக்கு இலங்கையில் கிடைத்த மோசமான அனுபவம்... உல்லாச விடுதி ஊழியர் போலீசில்...


இந்திய யுவதி குளியலறைக்கு சென்ற வேளையில்அவரை கையடக்கத் தொலைபேசி ஊடாக படம்
எடுக்க முயற்சித்த உல்லாச விடுதி ஊழியர் கைது.

யுவதியின் சகோதரனிடம் அகப்பட்டு வெள்ளவாயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார்.

இச்சம்பவம் இன்று வெல்லவாயாவில் இடம்பெற்றுள்ளது.

வட இந்திய யுவதி தனது தகப்பன் மற்றும் சகோதரன் ஆகியோருடன் இலங்கைக்கு உல்லாச பிரயாணிகளாக வந்து வெள்ளவாயாவிற்கு சென்று அங்குள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்தனர்.

அவ்வேளையில் இந்திய யுவதி குளியலறைக்கு சென்றுள்ளார்.இதனை தருணம் பார்த்திருந்த உல்லாச விடுதி ஊழியர் மறைந்திருந்து தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக யன்னல் வழியாக படம் எடுக்க முயற்சித்தார்.

 இதனைக் கண்ட இந்திய யுவதியின் சகோதரன் அவ் ஊழியரைப் பிடித்து நையப்புடைத்து விடுதி முகாமையாளருக்கும் அறிவித்து விட்டு அவர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொலிசாரினால் கைது செய்யப்பட்ட உல்லாச விடுதி ஊழியர் விசாரணைகளின் பின்னர் வெல்லவாயா மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர். ( கேசரி)
இந்திய யுவதிக்கு இலங்கையில் கிடைத்த மோசமான அனுபவம்... உல்லாச விடுதி ஊழியர் போலீசில்... இந்திய யுவதிக்கு இலங்கையில் கிடைத்த மோசமான அனுபவம்...  உல்லாச விடுதி ஊழியர் போலீசில்... Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.