-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து உடனடியாக பொதுத்தேர்தலை நடாத்துமாறு
வலியுறுத்தியும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது சனிக்கிழமை(1) மாலை மக்கள் ஆணைக்கு அனுமதி வழங்கு எனும் கருப்பொருளில் யாழ் வெலிங்டன் சந்தியில் நடைபவனியாக ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து நிறைவடைந்தது.
இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் சபாநாயகரின் தன்னிச்சையான நடவடிக்கையினை உடன் நிறுத்து தேர்தலைக்கண்டு ஏன் அச்சம் சுமந்திரனின் பேச்சே ரணிலின் மூச்சு மகிந்த ராஜபக்சவே நாட்டிற்கு பொருத்தமான அரச தலைவர் போன்ற பதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஆணைக்கு அனுமதி என்னும் தொனிப்பொருளில் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
மேலும் குறித்த பேரணி கொட்டும் மழையில் இடம்பெற்றதுடன் யாழ் மாவட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவன் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் முஸ்லீம் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுத் தேர்தலை வலியுறுத்தியும் மஹிந்தவுக்கு ஆதரவாகவும் யாழில் திரண்ட மக்கள்.
Reviewed by Madawala News
on
December 02, 2018
Rating: