பணம் பெற்றது உண்மைதான் ! ஆனால் சொந்த தேவைக்காக பெறவில்லை..



தான் லிற்றோ கேஸ் நிறுவனத்தில் கொடுப்பனவு பெற்றது உண்மைதான் ஆனால்
அது  சொந்த தேவைக்காக அல்ல என தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

லிற்றோ கேஸ் நிறுவனம் அமில தேரருக்கு 95000 வீதம் பல மாதங்கள் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க கொடுப்பனவு வழங்கியதாக நீதி மன்றில் வெளிசத்துக்கு வந்த நிலையில் அது தொடர்பில் சட்டத்தரணி தொலவத்த பொலிஸ் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார்.

இந்த நிலையில் 

தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பில் பல்வேறு உயர் பதவிகளை வகிக்கும் தனக்கு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை கழகத்தினால் மாத்திரமே சேவைகான கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் தன்னால் தொல்பொருள் ஆரய்ச்சி தொடர்பான வேலைகளை முன்னெடுக்கவும் தனது சமூக சேவைகளை முன்னெடுக்கவும் போதிய நிதி இல்லாததால் லிற்றோ கேஸ் நிறுவனத்தில் தான் நிதி உதவி கோரியதாக குறிப்பிட்ட அவர் லிற்றோ கேஸ் நிறுவனத்தில் சட்டத்திற்கு உட்பட்டு கொடுப்பனவு பெற்றதாக குறிப்பிட்டார்.

மேலும் குறித்த கொடுப்பனவுக்கு செய்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் தான் அந்த நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
பணம் பெற்றது உண்மைதான் ! ஆனால் சொந்த தேவைக்காக பெறவில்லை.. பணம் பெற்றது உண்மைதான் ! ஆனால் சொந்த தேவைக்காக பெறவில்லை.. Reviewed by Madawala News on December 02, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.