நான் ஜனாதிபதியாகியிருந்தால் கருப்புக் கண்ணாடியுடன் மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்குச் சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்க மாட்டேன் .
நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய முன்னணியுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தன்னை
நினைவுப்படுத்தியதாகவும், தன்னை நினைவுப்படுத்தாமல் ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தான் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகியிருந்தால் 12 பில்லியன் ரூபாய் செலவில் எனது மாவட்டத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்யமாட்டேன் என்று இன்று நாடாளுமன்றத்தில் தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தால் எதையெல்லாம் செய்திருக்க மாட்டேன் எனத் தெரிவித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் ஜனாதிபதியாகியிருந்தால் கருப்புக் கண்ணாடியுடன் மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்குச் சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்க மாட்டேன் என்றும், 2 வாரங்களுக்கு ஒரு தடவை வௌநாடுகளுக்கோ சென்றிருக்கமாட்டேன் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நான் ஜனாதிபதியாகியிருந்தால் கருப்புக் கண்ணாடியுடன் மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்குச் சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்க மாட்டேன் .
Reviewed by Madawala News
on
December 05, 2018
Rating: