தற்போது சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் ட்சி தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்.


சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்
 ஒன்று தற்போது நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் குறித்த கலந்துரையாடல் ஆரம்பித்து  உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

இது தவிர சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு தெளிவூட்ட உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
தற்போது சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் ட்சி தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல். தற்போது சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் ட்சி தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல். Reviewed by Madawala News on November 02, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.