ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளி அன்று புதிய பிரதமர் ஆக மஹிந்த ராஜபக்ஸ
அடங்களான புதிய அரசாங்கத்தை நிறுவிய பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும் என அறிவித்து இருந்தார்.
அதேவேளை நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அது தொடர்பான அறிவிப்பொன்றை திங்கள் கிழமை நவம்பர் 5 மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றம் கூட்டப்படும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றம் கூட்டப்படும் அவர் தெரிவித்துள்ளார்.. அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும் திகதி... சற்றுமுன்னர் ஜனாதிபதியால் அறிவிக்கபட்டது.
Reviewed by Madawala News
on
November 02, 2018
Rating: