பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில்,
இன்று (புதன்கிழமை) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு,
நம்பிக்கையில்லாப் பிரேரணையை உறுதிப்படுத்திய ஆவணம் ஜனாதிபதிக்கு சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டு அது ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது அறிந்ததே..
இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்ட கட்சிகளின் தலைவர்களை நாளை காலை ஜானதிபதி சந்திக்கிறார் என ராஜித்த சேனாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்ட கட்சிகளின் தலைவர்களை நாளை காலை ஜானதிபதி சந்திக்கிறார்.
Reviewed by Madawala News
on
November 14, 2018
Rating: