ஆராச்சிகட்டுவ பகுதியில் தனது கள்ளக்காதலனின் உடலில் பெற்றோலை ஊற்றி பெண் ஒருவர்
கொழுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (21) மாலை ஆராச்சிகட்டுவ, ஆனவிழுந்தாவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கமுவ, கிரிபாவ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு தீக்காயங்களுடன் நேற்று சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பெண் இரு பிள்ளைகளின் தாய் ஒருவராவார்.
குறித்த பெண் தனது கணவரிடம் இருந்து பிரிந்த பிறகு குறித்த நபருடன் 11 வருடகாலமாக கள்ளத் தொடர்பு ஒன்றை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தினமான நேற்று குறித்த நபர் சந்தேக நபரான பெண்ணின் வீட்டிற்கு வந்த சந்தர்ப்பத்தில் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சந்தேக நபரான குறித்த பெண் கள்ளக்காதலனின் உடலில் பெற்றோலை ஊற்றி கொழுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண் ஒருவரை பெற்றோலை ஊற்றி கொழுத்திய பெண்... விபரீதத்தில் முடிந்த தகாத உறவு.
Reviewed by Madawala News
on
October 22, 2018
Rating: