கண்டி வன்முறை, ரோஹிங்கிய அகதிகள் விவகாரம் தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கினேன். எனக்கு 5 இலட்சம் தரப்பட்டது.
ஏ.ஆர்.ஏ. பரீல்-
கடந்த மார்ச் மாதம் கண்டி - திகன பகு தியில் இடம்பெற்ற வன்செயல்களுடன் தொடர்புபட்ட மஹசொன்
பலகா யவின் அமித் வீரசிங்க உட்பட்டவர்களைக் கைது செய்ய பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவுக்கு நானே ஒத்துழைப்பு வழங்கினேன்.
இதே போன்று ரோஹிங்ய அகதிகளை கல்கிசையில் தாக்கியவர்களைக் கைது செய்வ தற்கும் நானே உரிய தகவல்களை வழங் கினேன்.
இதற்காக பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாக எனக்கு 5 இலட்சம் ரூபா வழங்கியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ) கோத்தாபய ராஜபக்ஷ ஆகி யோரின் கொலை, சதித் திட்டம் தொடர்பில் தகவல் வெளியிட்ட 'ஊழலுக்கு எதிரான படை' அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள் ளதாவது;
ரோஹிங்ய அகதிகளான புகலிடக் கோரிக்கையாளர்கள் கல்கிசையில் வைத்துத் தாக்கப்பட்டார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களான அரம்பேபொல ரத்னசார தேரர், சிந்தக சஞ்சீவ,
டேன் பிரியசாந்த, ஜனித மினிபே பாதாயன அமாவால்
ஆகியோரைக் கைதுசெய்ய பொலிஸார் என்னிடம் உதவி கோரினார்கள்.
நான் ஆரம்பத்தில் பொலிஸா ருக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்றாலும் தேசிய பாதுகாப்பு கருதி நான் பொலிஸாருக்கு உதவி செய்தேன்.
நான் வழங்கிய தகவல்களின்படி இவர்கள் கைது செய்யப்பட்டனர். கண்டி- தெல்தெனிய வன்செயல்களினையடுத்தும் இவ்வாறே என்னிடம் உதவி கோரப்பட்டது. நான் மஹசொன் பலகாய அமித் வீரசிங்கவை நன்கு அறிவேன் என்பது பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்குத் தெரியும்.
இது தொடர்பில் அவர் என் னிடம் உதவி கோரினார். நான் அமித் வீரசிங்க உட்பட்ட சிலரைக் கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.
பொலிஸாருக்கு நான் ஒத்துழைப்பு வழங்கியதற் காகவும் தகவல்கள் தெரி வித்ததற்காகவும் எனக்கு 2 1/2 இலட்சம் ரூபா வீதம் 5 இலட்சம் ரூபா பொலி ஸாரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. |
நான் வெளியிட்ட கொலைச்சதி முயற்சி தொடர்பான தகவல்களை யடுத்து எனது உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
யார் மூலம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என் பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. பொலிஸ் பாதுகாப்புக் கோரி பொலிஸ் மா அதிபரிடம் என்னால் செல்ல முடியாது. நான் ஜனாதிபதியிடமே எனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கண்டி வன்முறை, ரோஹிங்கிய அகதிகள் விவகாரம் தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கினேன். எனக்கு 5 இலட்சம் தரப்பட்டது.
Reviewed by Madawala News
on
September 18, 2018
Rating: