(படங்கள்) வகுப்பறையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்.... 49 மாணவர்கள் உயிரிழந்து பலர் காயம். ஆப்கானிஸ்தானில் சம்பவம்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் உள்ள தனியார் கல்வி மையத்தின் வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 49 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருக்கும் வகுப்பறையை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த அனைவரும் 18 வயதுக்கு குறைவாக இருக்கும் என குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மேலும், 67 பேர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
(படங்கள்) வகுப்பறையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்.... 49 மாணவர்கள் உயிரிழந்து பலர் காயம். ஆப்கானிஸ்தானில் சம்பவம்.
Reviewed by Madawala News
on
August 15, 2018
Rating: