இன்று மாலை வத்தேகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் பர்சான் என்பவர் உயிரிழப்பு. சகோதரர் காயம்.
வத்தேகம 12 ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நிக்ககொல்ல பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் பர்ஸான் என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் சகோதரர் அஷ்ரப் என்பவர் காயங்களுக்கு உள்ளாகி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை நிக்ககொல்ல பிரதேசத்தில் இருந்து உடதலவின்னையில் உள்ள மனைவி வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் செல்லும் போது அதன் மீது மரம் ஒன்று விழுந்ததிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் இரட்டையர்கள் என்பதுடன் சுமார் 31 வயதுடையவர்கள் எனவும் தெரிய வருகிறது.
இன்று மாலை வத்தேகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் பர்சான் என்பவர் உயிரிழப்பு. சகோதரர் காயம்.
Reviewed by nafees
on
August 15, 2018
Rating: