திருடுபோன சேவல்... அடுப்பங்கரையில் சமையலுக்காக தயார் நிலையில்... திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை பகுதியில் சேவல்  ஒன்றை திருடிய இளைஞன்
கைது செய்யப்பட்டதாக இன்று(16) கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவரூவதாவது,

 பெரியாற்று முனை,கிண்ணியா -07 முகவரியை சேர்ந்த கோழி உரிமையாளர் தனது நான்கு கிழோ கிராம் எடை மதிக்கத்தக்க சேவல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.



இதனையடுத்து குறித்த அதே பகுதியை சேர்ந்த  கடலுக்கு அருகாமையில் உள்ள கோழியின் தலையுடனான நீக்கப்பட்ட கழிவுகளை உரிமையாளர் கைப்பற்றியுள்ளதையடுத்து உரிய அருகாமையில் உள்ள வீட்டினுள் சென்று பார்த்தவேலையில் அடுப்பங்கறையில் கோழி இறைச்சி சமையலுக்காக தயார் நிலையில் வைக்கபட்டதையும் மீட்டதாக பொலிஸில் கோழி உரிமையாளர் முறைப்பாடு செய்ததாக தெரியவருகிறது.

பெரியாற்று முனை பகுதியை சேர்ந்த குறித்த இளைஞனை தனது வீட்டில் வைத்து இன்று(16) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருடுபோன சேவல்... அடுப்பங்கரையில் சமையலுக்காக தயார் நிலையில்... திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா திருடுபோன  சேவல்... அடுப்பங்கரையில்  சமையலுக்காக தயார் நிலையில்...  திருடனும் போலீசாரால் கைது. #கிண்ணியா Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.