இம் மாபெரும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ்வும், கெளரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் சிறியாணி விஜேவிக்ரம, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. கிளைகளுக்களில் சிறப்பாக செயற்பட்ட இளைகளுக்கான விருதுகள், ஒவ்வொரு கிளைகளிலும் சிறப்பாக செயற்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கான விருதுகள் மற்றும் சமுகத்தில் பல் துறை சார்ந்தவர்களுக்கான விசேட விருதுகளும் வழங்கி அதிதிகளால் கெளரவிக்கப்பட்டனர்.
மீண்டும் பேரவையின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட தொழிலதிபர் ஸஹீட் எம்.றிஸ்மி இந் நிகழ்வு சிறப்புற உழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 68வது வருடாந்த பொதுக் கூட்டம் விருது வழங்கும் நிகழ்வு
Reviewed by Madawala News
on
July 16, 2018
Rating: