ஞானசார தேரரை நாளை வெள்ளிக்கிழமைக்குள் சிறையிலிருந்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஞானசார தேரரின் சுக துக்கங்களை விசாரிப்பதற்கு நேற்று சிறைச்சாலைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், தேரரின் விடுதலை குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கை என்னவென வினவியதற்கே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை எமக்கு சவாலுக்குட்படுத்த முடியாது. இருப்பினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமையாகும் போது தேரரை வெளியே எடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
ஞானசார தேரர் சிறையில் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் என்ன ஆடைய அணிந்திருந்தார் என்பதை அவர் வெளியே வந்தபின்னர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.