ஹொரவ்பொத்தானயில் மாபெரும் திறந்த கட்டுரைப் போட்டி.


ஹொரவ்பொத்தான, நிக்கவெவ எனும் கிராமத்தில் இயங்கிவரும் அந் - நஜா இளைஞர் கழகம் ஆரம்பிக்கப்பட்டு
சுமார் 20 வருங்களையொட்டி மாபெரும் திறந்த கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மற்றும்  ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புகள்:

1. பல்லின சமூகத்தின் மத்தியில் பண்பாட்டு எழுச்சி.
2. போதையில் மூழ்கியுள்ள இளைஞர்களை தடுப்பதற்கான வழிமுறைகள்.
3. இன்றைய ஆடை அணிகலன்கள் எவ்வாறு அமைய வேண்டும்.
4. நவீன தொடர்பு சாதனங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள்.
5. ரமழான் கற்றுத் தந்த பாடங்களும், ஏற்படுத்தி மாற்றங்களும்.

விதிமுறைகள்:

* கையெழுத்தில்  எழுவுவதானால் A4 தாளில் ஒரு பக்கத்தை மாத்திரம் பயன்படுத்தவும் அல்லது டைப் (Type) செய்தும் அனுப்பலாம்.

* ஏதாவது ஒரு தலைப்பை தெரிவு செய்து 1000 - 1250 சொற்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

* ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரையை மாத்திரம் எழுத வேண்டும்.

* கட்டுரைகளை பதிவுத் தபாலில் அனுப்புவது விரும்பத்தக்கது, அல்லது நேரடியாகவும் ஒப்படைக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்  (ஏற்பாட்டுக் குழு)
அந் - நஜா இளைஞர் கழகம்,
121 A, நிக்கவெவ, ஹொரவ்பொத்தான

அனுப்ப வேண்டிய இறுதித் திகதி:
2018.06.30

தொடர்புகளுக்கு:
0766196824 - நிம்ஸாத்
0772906959 - ஹமீட் மௌலவி  

ஹொரவ்பொத்தான நிரூபர்,
முஹம்மட் ஹாசில்.

ஹொரவ்பொத்தானயில் மாபெரும் திறந்த கட்டுரைப் போட்டி. ஹொரவ்பொத்தானயில் மாபெரும் திறந்த கட்டுரைப் போட்டி. Reviewed by Madawala News on June 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.