சவுதி அரேபியாவின் பெண்ணியல் சமூக செயற்பாட்டாளர் அஸீசா அல் யூசுப்
உள்ளிட்ட ஐந்து பெண்களை சவுதி அரசு கைது செய்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சவுதி அரேபியாவின் பெண்ணியல் சமூக செயற்பாட்டாளர்
அஸீசா அல் யூசுப் கடந்த காலங்களில் பெண்கள் வாகனம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக குரல் கொடுத்து வந்தவராவார்.
அடுத்த மாதம் அளவில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கான தடை சவுதியில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சவுதி அரேபியாவின் பெண்ணியல் சமூக செயற்பாட்டாளர்
அஸீசா அல் யூசுப் உள்ளிட்ட சிவில் அமைப்பு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓரிரு ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை சவுதி அரசு தடுத்து வைத்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஸீசா அல் யூசுப் உள்ளிட்ட ஐந்து பெண்கள் கைது !!
Reviewed by Madawala News
on
May 25, 2018
Rating: