போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (18) கைது செய்துள்ளனர்.
மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொருட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
Reviewed by Madawala News
on
April 19, 2024
Rating: