100 ரூபாயாக உள்ள பால் தேநீரின் விலையை 90 ரூபாயாக குறைக்க போவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட பால் மா சந்தைக்கு வந்த பின்னர், பால் தேநீரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது 100 ரூபாயாக உள்ள பால் தேநீரின் விலை 90 ரூபாயாக குறையும்.
இதேவேளை, புறக்கோட்டையை அண்மித்த பகுதியில் பால்மா அல்லாமல் டின்பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் தேநீர் தற்போது 60 முதல் 80 ரூபாய் வரை உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
100 ரூபாயாக உள்ள பால் தேநீரின் விலையை 90 ரூபாயாக குறைக்க போவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
Reviewed by Madawala News
on
March 25, 2024
Rating: