இரத்தினபுரியில் கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த இளைஞர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களும், உயிரிழந்தவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வளைவு ஒன்றில் காரை கட்டுப்படுத்த முடியாமல் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டது என்றும் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
காரை கட்டுப்படுத்த முடியாமல் 3 மோட்டார் சைக்கிள்களில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - நால்வர் காயம்.
Reviewed by Madawala News
on
February 12, 2024
Rating: