இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு.



புத்தல, கோனகங்கார பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புத்தல, கோனகங்கார வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று (27) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று பிற்பகல் குறித்த இரு இளைஞர்களும் வயல் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்த 31 மற்றும் 32 வயதுடைய இரு இளைஞர்களும் புத்தல, வகுருவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து கோனகங்கார பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு.  இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.