அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் விபத்தில் பலி.



(எஸ்.அஷ்ரப்கான்)

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின்
 தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற  இணையத்தின் (NGOs Consortium) தவிசாளருமான, 
பிரபல சமூக செயற்பாட்டா          ளருமான
வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணமானார்.

தம்பிலுவிலில்  பிறந்து  தம்பட்டையில் வசித்து வந்த வடிவேல்          பரமசிங்கம்  கொழும்பு செல்லும் வழியில் செவனப்பிட்டியில்  நள்ளிரவு (29 )  இடம்பெற்ற விபத்தில்  மரணமடைந்தார்.

இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத சமூகத்திற்கான  பேரிழப்பாகும், தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவர், நல்லுள்ளம் கொண்டவர் ஊடகவியலாளர்களுடன் அன்பாகவும் நட்பாகும் பழகும் இவர்  பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் அமைப்புக்களில் சமூக பற்றுள்ள மக்கள் தொண்டனாய் செயற்பட்டவர், மென் சுபாவம் நிறைந்த சிறந்த பண்பாளர், சமூகசிந்தனாவாதி. ஆறுதலாக அமைதியாக மதிப்பளித்து பேசுபவர். அன்பாக பழகக் கூடியவர், அன்னாரின் இழப்பு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் விபத்தில் பலி. அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் விபத்தில் பலி. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.