இன்று பகல் புகையிரதத்துடன் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் மேலதிக தகவல்கள்.



இன்று (16) பிற்பகல் புகையிரதத்துடன் கார் மோதியதில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.



ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தொட்ட புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் கார் மோதியுள்ளது.



விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பலியாகினர்.



காரில் 35 வயதுடைய ஆணும் 80 வயதுடைய பெண்ணொருவரும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



காரில் 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய பாட்டியும் பயணித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



குறித்த இருவரும் அஹங்கம பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் என தெரியவருகிறது.



சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் புகையிரதத்துடன் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் மேலதிக தகவல்கள். இன்று பகல் புகையிரதத்துடன் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் மேலதிக தகவல்கள். Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.