புதிய தலைமுறை விருதுகள்- "வளர்ந்துவரும் இளம் அரசியல்வாதி" விருதுக்கு அஹ்மத் ஸாதிக் தெரிவு.
இலங்கை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் "புதிய தலைமுறை விருதுகள்" நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் "Young Emerging Politician - *வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி"* எனும் விருதை பேருவளையைச் சேர்ந்த இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இவர் இதுவரையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கையில் உள்ள இளைஞர்களுக்கான எதிர்கால வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்விருது வழங்கும் விழாவானது அக்டோபர் மாதம் 29 ஆம் திகதியன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ. ரொஷான் ரணசிங்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் கலாநிதி திரான் டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டதுடன் மேலும் பல முக்கிய பிரபலங்களும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வை "புதிய தலைமுறை விருதுகள்" எனும் பெயரில் Institute of Women Management பெண்கள் முகாமைத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
"வளர்ந்துவரும் இளம் அரசியல்வாதி" விருதுக்கு அஹ்மத் ஸாதிக் தெரிவு.
Reviewed by Madawala News
on
October 30, 2022
Rating: