மதுபோதையில் ஜீப் வாகனத்தை செலுத்தி மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கைது.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் ஜீப் ரக வாகனமும் முற்சக்கரவண்டியும் மோதியதில் முற்சக்கரவண்டி சாரதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய ஜீப் ரக வாகனத்தின் சாரதியான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய ஆளுநரின் தமிழ்மொழி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியுமான ஜனார்த்தனன் (36) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சாரதியை வைத்திய அறிக்கைக்கு உட்படுத்திய போது மது போதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அப்துல்சலாம் யாசீம்
மதுபோதையில் ஜீப் வாகனத்தை செலுத்தி மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கைது.
Reviewed by Madawala News
on
October 10, 2022
Rating: