140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட வரி விதிப்பினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிகரட் மற்றும் மதுபான விலை அதிகரிப்பு.
Reviewed by Madawala News
on
October 01, 2022
Rating: