யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டினை சோதனையிட்ட வேளை வீட்டின் சமையல் அறையில் 34 வயதுடைய ஒருவர் கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்துள்ளா.ர்
அதனை அடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அங்கிருந்த 15 லீட்டர் கசிப்பையும் மீட்டு இருந்தனர். அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். (a
வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் பொருட்களுடன் சிக்கினார்.
Reviewed by Madawala News
on
October 21, 2022
Rating: