சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதன் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே இந்த சோக நிலைக்கு காரணம் எனவும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு கலாநிதி வலவாஹெங்குனாவேவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
மகிந்த தேரரின் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் சமய நிகழ்வுகளை தொடர்ந்து அனுஷாசனம் ஒன்றை வழங்கினார். சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருவதாகவும், அதீத உணவை உட்கொள்வதாகவும் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பார்கள் மற்றும் மக்களை ஏமாற்றுவார்கள். மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும், தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் மற்றும் ஜே.வி.பி ஆகிய இருவருமே நாட்டை சீரழிக்க வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர். மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் ஜனாதிபதியின் கடமையாகும்” என தேரர் கூறினார்.