நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு பழுதடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாவது அலகில் முன்னதாக திட்டமிடப்பட்ட திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போது 3ஆவது அலகு தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், மின் விநியோகத்தை நிர்வகிக்க பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு பழுதடைந்து விட்டது... ; எரிசக்தி அமைச்சர்
Reviewed by Madawala News
on
August 15, 2022
Rating: