எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை (26)
இடம்பெறாது என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விநியோகத்தை நாளை முதல் நிறுத்தியுள்ளதாக முதன்மை எரிவாயு வழங்குநர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாளையும் லிட்ரோ கேஸ் விநியோகம் இல்லை ; லிட்ரோ அறிவிப்பு
Reviewed by Madawala News
on
May 25, 2022
Rating: