ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள்..
ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு
துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் உள்ளன.
கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழிகள் மற்றும் தொழில் பயிற்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (25) முற்பகல் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்து, அந்நிய செலாவணியை உருவாக்குவதுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை கைப்பற்றுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். திறமையான தொழிலாளர்களை உருவாக்குவதன் மூலம், அதிக ஊதியம் பெறும் தொழிலுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
ஐரோப்பா உட்பட பல நாடுகளில் செவிலியருக்கு அதிக தேவை உள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜப்பானில் மட்டும் முதியோர் பராமரிப்பு மற்றும் கேட்டரிங் துறையில் 350,000 க்கும் மேற்பட்ட வேலை காலியிடங்கள் இருப்பதாக மதிப்பிடுகிறது. இந்த விஷயத்தில் ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமாகும்.
தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட தனியார் மற்றும் அரச துறைகளின் பங்களிப்புடன் ஜப்பானிய மொழித் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது அரச சேவையில் உள்ள எந்தவொரு நபரும் அல்லது பல்நோக்கு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள ஊழியர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறும் போது எதிர்நோக்கும் தடைகளை நீக்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்டவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் போது மூத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், வீடமைப்புக் கடன்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வசதிகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு வருவதற்கு அவர்களை ஊக்குவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தூதரகங்களின் தலையீட்டின் ஊடாக தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் லைன் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள்..
Reviewed by Madawala News
on
May 25, 2022
Rating: