பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
அவர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது அறிந்ததே..இந்நிலையில் அவர் தற்போது பொலிஸ் வைத்தியசாலையில் இருந்து அங்கொடையில் உள்ள தேசிய தொற்று நோய்களுக்கான வைத்தியசாலைக்கு (IDH) இற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொற்று நோய்கள் நிறுவகத்தின் ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை உறுதிப்படுத்தினார்.
“சரத் வீரசேகர பொலிஸ் மருத்துவமனையில் இருந்து IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று டாக்டர் விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுகுள்ளான அமைச்சர் சரத் வீரசேகர, அங்கொடை IDH இற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
Reviewed by Madawala News
on
January 21, 2022
Rating: