(அஷ்ரப் .ஏ சமத்)
பொத்துவில் அஸ்மின் எழுதிய அனைத்து
பாடல்களும் எழுதியுள்ள #இசைசங்கமம் பாடல் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு Colombo City Centre - Scope Cinemas திரையரங்கில் நடைபெறவுள்ளது.
"நாடி" தயாரித்துள்ள இப்பாடல்களுக்கு நிமேஸ் குலசிங்க,சத்துரங்க டி சில்வா ஆகியோர் இசை வழங்கியுள்ளனர்.
பாடல்களை கோகுலன் சாந்தன்,சுதர்சினி கோணேஸ்வரன்,
குகனேஸ்வரன்,சாதீர் அஹமட்,ரவி ரொயிஸ்ட்டர் ஆகியோர் பாடியுள்ளனர்.
தெரண தொலைக்காட்சியின் பிரதித்தலைவரும் பிரதம நிறைவேற்று பணிப்பாளருமான லக்சிரி விக்ரமகே அவர்களின் எண்ணக்கருவில் உருவான "இசை சங்கமம்" பாடல்களில் இலங்கையின் அனைத்து சமூகத்தை சேர்ந்த கலைஞர்களின் பிரதிநிதிகளும் பங்களிப்பு செய்துள்ளனர்.
இந்த பாடல்களை இயக்கி, விழாவினை நெறிப்படுத்தியுள்ளார் தெரண தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பிரிவு பணிப்பாளர் சர்மிளா தர்மராசா.
இப்பாடல் வெளியீட்டு விழாவுக்கு இசையமைப்பாளர் சங்கத்தலைவர் கலைமாமணி தினா, இசையமைப்பாளர் சதீஸ் வர்சன், இசையமைப்பாளர் சிரிகாந்தேவா, பிரபல ஒலிப்பொறியியலாளரும் இசையமைப்பாளருமான ஆர்.கே.சுந்தர், இசையமைப்பாளர் தாஜ்நூர், பாடகர் வேல் முருகன், நடிகரும் இயக்குனருமான "காதல்" சுகுமார், நடிகர் "நண்டு" ஜெகன், இயக்குனர் "ராசய்யா" கண்ணவன, இயக்குனர் ஆர்.முத்துக்குமார், பிரபல திரைவிமர்சகர்,பத்திரிகையாளர் "வலைப்பேச்சு" அந்தணன் ஆகியோர் வாழ்த்துக்களை வழங்கியுள்ளனர்.
"நாடி" வழங்கும் இசை சங்கமம் பாடல் வெளியீட்டு விழா
Reviewed by Madawala News
on
January 20, 2022
Rating: