வெலிகம பிரதேச கடலில் நீராடச் சென்ற 4 பாடசாலை மாணவிகளில் இருவர் மீட்பு இருவரை காணவில்லை.



மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற நான்கு
பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இரு மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 12 மற்றும் 15 வயதுடைய மாணவிகள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மேற்படி மாணவிகள் இன்று (23) மதியம் தமது பெற்றோருடன் கடலில் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வெலிகம பிரதேச கடலில் நீராடச் சென்ற 4 பாடசாலை மாணவிகளில் இருவர் மீட்பு இருவரை காணவில்லை. வெலிகம பிரதேச கடலில் நீராடச் சென்ற 4 பாடசாலை மாணவிகளில் இருவர் மீட்பு இருவரை காணவில்லை. Reviewed by Madawala News on January 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.