வவுனியா, தோணிக்கல் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது நேற்று (22.12) திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடிப்பு.
Reviewed by Madawala News
on
January 23, 2022
Rating: