பட்ஜெட் வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.பிக்களை கட்சிப்பதவிகளில் இடைநிறுத்தியது முஸ்லிம் காங்கிரஸ்.
நாடாளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது,
கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும் கட்சியில் அவர்கள் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.பிக்களை கட்சிப்பதவிகளில் இடைநிறுத்தியது முஸ்லிம் காங்கிரஸ்.
Reviewed by Madawala News
on
November 24, 2021
Rating: